×

சிறுவனுடன் தகாத உறவு முதியவருக்கு 10 ஆண்டு சிறை

மதுரை: சிறுவனை கட்டாயப்படுத்தி தகாத உறவில் ஈடுபட்ட முதியவருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மதுரை மாவட்டம், காதக்கிணறு கம்மாபட்டியைச் சேர்ந்தவர் அம்மாசி(59). இவர், அந்தப்பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுவனை கட்டாயப்படுத்தி தவறான உறவில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அப்பன்திருப்பதி போலீசார் கடந்த 2016ல் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை மதுரை போக்சோ சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இருதரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் நீதிபதி ப்ளோரா, அம்மாசிக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.


Tags : prison , Juvenile delinquency, old age, 10 years, imprisonment
× RELATED கடலூர் மத்திய சிறையில் கைதிகள் போராட்டம்