கோவை: கோவை செல்வபுரத்தை சேர்ந்தவர் காசாளபாண்டி. நகைப்பட்டறை தொழிலாளி. இவரது குடும்ப அட்டையில் காசாளபாண்டி என்பதற்கு பதிலாக காசபாண்டி என இருந்துள்ளது. இதை திருத்த காசாளபாண்டி கோவை தெற்கு தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அதற்கு இளநிலை உதவியாளர் வனிதா பிரபா, தாசில்தார் ராஜேஸ்வரி ரூ.700 லஞ்சம் கேட்டுள்ளனர். புகாரின்பேரில் 8.11.2010ம்தேதி காசாளபாண்டியிடம் பணம் வாங்கும்போது இருவரையும் போலீசார் கைது செய்தனர். வழக்கை கோவை லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஸ்தோத்திரமேரி விசாரித்து, 2 பேருக்கும் தலா ஓராண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.