நாகர்கோவில்: தென்மாவட்ட ரயில் பயணிகள் சங்க கவுரவ தலைவரும், எம்பியுமான ஞானதிரவியம், பொதுச்செயலாளர் சூசைராஜ், தலைவர் தேவ் ஆனந்த் ஆகியோர் தென்னக ரயில்வே பொதுமேலாளரை சந்தித்து பேசினர். பின்னர் அவர்கள் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: தென்மாவட்ட பயணிகளின் வசதிக்காக தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு வாரத்தில் திங்கள், செவ்வாய், புதன் ஆகிய 3 நாள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் மறுமார்க்கமாக நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு செவ்வாய், புதன், வியாழன் ஆகிய 3 நாள் ெசல்கிறது. ெசன்ைனயில் உள்ள மக்கள் இந்த ரயிலில் பயணம் செய்வதற்கு பல்வேறு சிரமங்கள் உள்ளன.
இதனால் எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு ரயிலை இயக்க வேண்டும். இது தவிர திங்கள், செவ்வாய், புதன் ஆகிய 3 நாள் என்பதை வெள்ளி, சனி என்று 5 நாட்களாக நீட்டித்து இயக்கும் நடவடிக்ைக எடுக்கவேண்டும். அதே போல் மறுமார்க்கமாக ெசவ்வாய், புதன், வியாழன், ஞாயிறு, திங்கள் ஆகிய 5 நாள் நாகர்கோவிலில் இருந்து ெசன்னை எழும்பூருக்கு இயக்கவேண்டும். வெள்ளிகிழமை சென்னையில் இருந்து வரும் ரயிலை சனிக்கிழமை மாலை 5 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து வேளாங்கண்ணிக்கு இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். ஞாயிறு மாலை வேளாங்கண்ணியில் இருந்து நாகர்கோவிலுக்கு இயக்க வேண்டும். இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட தென்னக ரயில்வே பொது மேலாளர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.