மதுரை: பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் 24 வார கருவை கலைக்க உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 26 வயது பெண் பக்கத்து வீட்டுக்காரரால் பலாத்காரம் செய்யப்பட்டார். பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட மகளின் கருவை கலைக்க அனுமதி கோரி தாயார் ஐகோர்ட் மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ப்பித்திருந்தார்.