×

மும்பையில் 3 அடுக்குமாடி அலுவலக கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து : கொழுந்து விட்டு எரியும் தீயை அணைக்க பெரும் போராட்டம்

மும்பை : மும்பையில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் அலுவலக கட்டிடம் ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மும்பையின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள புறநகரான கிழக்கு அந்தேரியில் இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது. 3 மாடிகளை கொண்ட இந்த வணிக கட்டிடத்தில் 2வது மாடியில் அமைந்துள்ள ரோல்டா என்ற பன்னாட்டு நிறுவனத்தின் அலுவலகம் முற்றிலும் தீக்கறையானது. வானுயர கொழுந்துவிட்டு எரிந்த தீயால் கிழக்கு அந்தேரியில் கடும் புகைமூட்டம் ஏற்பட்டுள்ளது.

3 மாடி கட்டிடத்தில் இயங்கி வந்த ரோல்டா நிறுவனத்தின் சர்வர் அறையில் ஏற்பட்ட தீ, அந்த கட்டிடம் முழுவதும் பரவியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தீயை அணைக்க 12 தீயணைப்பு வண்டிகளில் விரைந்த வீரர்கள், தொடர்ந்து போராடி வருகின்றனர். கட்டிடத்தில் இருந்த அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டு விட்டதாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீயை அணைக்கும் பணியில் தொடர்ந்து வீரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.


Tags : office building ,building ,Mumbai Mumbai ,Terrorist Fire , Mumbai, protest, Andheri, fire, accident
× RELATED தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும்...