சென்னை: டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றுவதற்கான சட்ட நடவடிக்கைகள் பற்றி ஆலோசனை நடைபெற்று வருகிறது. முதல்வர் பழனிசாமி அறிவிப்பு தொடர்பாக தலைமைச் செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் ஆலோசனையில் ஈடுப்பட்டுள்ளார். மேலும் தலைமைச் செயலகத்தில் வேளாண்துறை செயலாளர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.