×

ராமேஸ்வரம் கடற்கரையில் கரை ஒதுங்கிய சிவப்பு நிற உருளைகளால் பரபரப்பு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கடற்கரையில் நேற்று கரை ஒதுங்கிய சிலிண்டர் உருவம் கொண்ட சிவப்பு நிற உருளைகளால் மீனவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரை வடக்கு பகுதியில் சங்குமால் கடற்கரை வரை நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. இதன் அருகில் கடற்கரையில் 4 அடி உயரத்தில் சிலிண்டர் போன்ற உருவம் கொண்ட இரும்பினால் செய்யப்பட்ட மூன்று உருளைகள் ஒன்றாக இணைக்கப்பட்ட நிலையில் நேற்று கரை ஒதுங்கியது.

இது காஸ் நிரப்புவதற்கான சிலிண்டர்களா அல்லது ரசாயன திரவங்கள் நிரப்புவதற்கான இரும்பு உருளைகளா என்று தெரியவில்லை. சிவப்பு நிறத்தில் கரை ஒதுங்கிய இந்த உருளைகள் கப்பல்களில் பயன்படுத்தும் உபகரணம் அல்லது கடலில் எல்லை காட்டுவதற்காக போடப்படும் உருளை மிதவைகளாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த இரும்பு உருளைகளால் இப்பகுதி மீனவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து புலனாய்வு துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Tags : beach ,Rameshwaram , Rameswaram, on the beach, red cylinder, thrilling
× RELATED ஈஞ்சம்பாக்கம் கடற்கரையில் பாட்டிலால் குத்தி வாலிபர் கொலை