×

ஜப்பானின் யோகோகாமா பகுதியில் நிறுத்தப்பட்ட கப்பலில் உள்ள இந்தியர்களுக்கு உதவிகள் வழங்கப்படுகிறது: அமைச்சர் ஜெய்சங்கர்

டெல்லி: ஜப்பானின் யோகோகாமா பகுதியில் நிறுத்தப்பட்ட கப்பலில் உள்ள இந்தியர்களுக்கு உதவிகள் வழங்கப்படுகிறது என திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதில் அளித்துள்ளார். இந்தியர்களுக்கு டோக்கியோவில் உள்ள இந்திய தூதரகம் தேவையான உதவிகளை அளித்து வருகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக கப்பலில் உள்ள பயணிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags : Jaishankar Indians ,Minister ,Japan ,Yokohama ,Minister Jaishankar , Japan, Yokohama, Shipping, Indians, Minister Jaishankar
× RELATED ஜப்பான், இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!!