×

சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றி எதிரொலியாக ஆம் ஆத்மியில் இணைய ஆர்வம் காட்டும் மக்கள்: கடந்த 24 மணி நேரத்தில் 10 லட்சம் பேர் இணைந்தனர்

டெல்லி: டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் அமோக வெற்றி எதிரொலியாக ஆம் ஆத்மி கட்சியில் சேர மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். டெல்லி சட்டப்பேரவை தேர்தலில், மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62  இடங்களை கைப்பற்றி அசூர வெற்றியை பதிவு செய்து ஆம் ஆத்மி கட்சி மீண்டும் 3வது முறையாக ஆட்சியை தக்கவைத்துள்ளது. இந்த தேர்தலில் மத்திய அரசில் ஆளும் கட்சியாக உள்ள பாஜ 8 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. எனினும், இது கடந்த தேர்தலை காட்டிலும் 5 இடங்கள் கூடுதலாகும். அதேசமயத்தில் காங்கிரஸ் கட்சிக்கு இம்முறையும் ஏமாற்றமே மிஞ்சியது.

அக்கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. 62 இடங்களில் வெற்றி பெற்று டெல்லியில் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ள  கெஜ்ரிவால், மூன்றாவது முறையாக டெல்லி முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தலில் வெற்றி பெற்ற கெஜ்ரிவால் வரும் 16ம் தேதியன்று முதல்வராக பதவியேற்க உள்ளதாக ஆம் ஆத்மியின் முன்னணி தலைவர்களில் ஒருவரும், துணை முதல்வருமான சிசோடியா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் அமோக வெற்றி எதிரொலியாக ஆம் ஆத்மி கட்சியில் சேர மக்கள் ஆர்வம் காட்டி வருவதாக ஆம் ஆத்மி கட்சியின் டிவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 10 லட்சம் பேர் கட்சியில் இனைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : election ,victory ,Aam Aadmi ,Assembly , Legislative election, AAP
× RELATED கை விலங்குக்கு வாக்குகளால் பதிலடி...