சென்னை: நாடு முழுவதும் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளில் மாணவர்கள் சேராததால் 50% இடங்கள் காலியாக உள்ளது என்று சென்னையில் AICTE தலைவர் அணில் சஹஸ்ரபுத்தே கூறியுள்ளார். அடுத்த 2 ஆண்டுகளுக்கு புதிய பொறியியல் கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் தொடங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சில புதிய படிப்புகளுக்கு மட்டுமே அனுமதி என அவர் தெரிவித்துள்ளார்.