×

திருவண்ணாமலை பேருந்து நிலையம் அருகே ஆட்டோ ஓட்டுநர் வெட்டிக்கொலை

தி.மலை: திருவண்ணாமலை பேருந்து நிலையம் அருகே ஆட்டோ ஓட்டுநர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். தியாகி அண்ணாமலை நகரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பாஸ்கர் முன்பகை காரணமாக ஆனந்தனை அரிவாளால் வெட்டியுள்ளார். ஆட்டோ ஓட்டுவதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் ஆனந்தனை வெட்டிய பாஸ்கர் போலீசில் சரணடைந்தார். சரணடைந்த பாஸ்கர் மீது திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.


Tags : Auto driver ,Thiruvannamalai , Thiruvannamalai, Auto Driving, Vettikolai
× RELATED குடிநீர் பாட்டிலில் காலாவதி தேதி...