×

தனியார் பொறியியல் கல்லூரிகள் இணைப்பு அந்தஸ்து பெற கால அவகாசம் நீட்டிப்பு: அண்ணா பல்கலை. அறிவிப்பு

சென்னை: தனியார் பொறியியல் கல்லூரிகள் இணைப்பு அந்தஸ்து பெற கால அவகாசத்தை நீட்டித்து அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கல்லூரிகள் இணைப்பு அந்தஸ்து பெறுவதற்கான கால அவகாசம் பிப்.17-ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. பிப். 10-தேதியுடன் நிறைவடைந்த கால அவகாசத்தை பிப். 17-ம் தேதி வரை நீட்டித்து அண்ணா பல்கலை. உத்தரவிட்டுள்ளது. பிப். 17-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க தவறிய கல்லூரிகள் ரூ.25,000 அபராதத்துடன் பிப்.25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை பரிசீலித்து உரிய அனுமதி வழங்கப்படும் எனவும் கூறியுள்ளது.


Tags : engineering colleges ,Anna University Directive , Private engineering colleges, affiliation status, extension of time
× RELATED தமிழகத்தில் உள்ள 44 பொறியியல்...