மதுரை: சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் தனது 26 வயது மகள் வலிப்பு நோயால் மனதளவில் பாதித்திருந்தார். சில வாரங்களுக்கு முன் என் மகளின் வயிறு சற்று வீங்கியிருந்தது. டாக்டர்களிடம் பரிசோதித்த போது என் மகள் 3 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரிய வந்தது. பக்கத்து வீட்டைச் சேர்ந்த காசி என்பவர், பலாத்காரம் செய்தது தெரிந்தது. என் மகளின் வயிற்றில் வளரும் கருவை கலைக்க சிவகங்கை அரசு மருத்துவமனை டாக்டர்களுக்கு உத்தர விட வேண்டும் என கூறியிருந்தார்.
இம்மனு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன் ேநற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் தனப்ரியா தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘‘அந்தப் பெண்ணை பரிசோதித்தோம். அவர் கர்ப்பமாகி 24 வார கரு வளர்ந்துள்ளது. இந்தக் கருவை கலைக்க உடல்ரீதியாக தகுதி பெற்றுள்ளார். அவரது கருவை கலைக்கலாம்’’ என கூறப்பட்டிருந்தது. இதையடுத்து மனுவின் மீது உரிய உத்தரவு அளிப்பதாக கூறி நீதிபதி வழக்கை ஒத்தி வைத்தார்.