×

வெயில், சூறைக்காற்று வெறிச்சோடிய கன்னியாகுமரி

கன்னியாகுமரி: சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலையை பார்ப்பதற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் 3 படகுகளை இயக்குகிறது.

இந்தநிலையில் கடந்த இரு தினங்களாக கடல்சீற்றம் காரணமாக படகுகள் சேவை ரத்து செய்யப்பட்டது. அதுபோல நேற்று காலையில் ஒரு மணி நேரம் மட்டுமே படகுகள் இயங்கின. அதன்பிறகு சூறைக்காற்று வீசியதால் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இதனால் ஆர்வத்துடன் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இது ஒருபுறம் இருக்க, பகல் வேளையில் சுட்டெரிக்கும் வெயிலால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

Tags : virgin , Weil, hurricane, fledgling nun
× RELATED கன்னி