×

ராமதாஸ் அறிவிப்பை தொடர்ந்து தேமுதிக ஆட்சியை பிடிக்கும் : பிரேமலதாவும் பேச்சு

சென்னை: வரும் பேரவை தேர்தலில் தேமுதிகவும் ஆட்சியை பிடிக்கும் என்று பிரேமலதா கூறியுள்ளார். ஏற்கனவே பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தேமுதிகவின் 20ம் ஆண்டு கொடி நாள் விழாவை முன்னிட்டு அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் உள்ள 118 அடி உயர கொடிக் கம்பத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் கொடியேற்றி வைத்தார். நிகழ்ச்சியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா, துணை செயலாளர் எல்.கே.சுதீஷ், இளங்கோவன், பார்த்தசாரதி, அனகை முருகேசன் விஜயகாந்த் மகன்கள் விஜய பிரபாகரன், சண்முகபாண்டியன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா பேசுகையில், ‘‘இந்தியாவில் எத்தனையோ மாநிலங்களில் எத்தனையோ முதல்வர்கள் வந்துகொண்டிருக்கின்றனர், அவர்கள் எல்லாம் விஜயகாந்த் பாலிசியைத்தான் கடைபிடிக்கின்றனர். ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி வீடுதேடி ரேஷன் எனும் திட்டத்தைத் தான் கொண்டு வந்துள்ளார். டெல்லியில் கெஜ்ரிவால் லஞ்சத்தை ஒழிக்க வேண்டும் என்ற பாலிசியைத்தான் கடைபிடித்து 3வது முறையாக முதல்வராக வந்துள்ளார் அவருக்கு தேமுதிக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

இதுபோன்ற ஆயிரக்கணக்கான திட்டங்களை விஜயகாந்த் மக்களுக்கு கொடுத்திருப்பார். ஆனால் மக்கள் ஒரு வாய்ப்பு கொடுத்தார்களா? இன்றைக்கு இந்தியா முழுவதும் மொழியால், சாதியால், மதத்தால் மக்களை துண்டாடுகின்றன. நாலாபுறமும் சூழ்ச்சி, துரோகத்திற்கு மத்தியில் தேமுதிக வெற்றி நடைபோடுகிறது. தேமுதிக தலைவர் முதல்வராக வந்தால் இந்தியாவில் தமிழகத்தை வல்லரசு நாடாக மாற்றுவார். எனவே மாற்றத்தை நோக்கி நோக்கி பயணிப்போம். கூட்டணியில் விரிசல் இல்லை. கூட்டணி தர்மத்தை கடைபிடிப்பவர் விஜயகாந்த். அனைத்து கட்சிகளும் கூட்டணி தர்மத்தை கடைபிடிக்க வேண்டும். 2021 சட்டமன்ற தேர்தலில் தேமுதிக ஆட்சி பிடிக்கும் என்றார்.

Tags : DMK ,Premalatha Ramadas ,announcement , Ramadas, DMK's announcement,Premalatha
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி