×

குன்னூர்-மேட்டுப்பாளையம் ரோட்டில் கூட்டமாக திரியும் காட்டு யானைகள்

குன்னூர்: குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால், வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குன்னூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக காலை நேரங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது இதனால் வனப்பகுதிகள் பசுமைக்கு மாறி வருகின்றன. இந்நிலையில் உணவைத் தேடி சமவெளிப் பகுதிகளில் இருந்து குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதைக்கு, குட்டிகளுடன் 7 யானைகள் வந்து முகாமிட்டு உள்ளன. அவ்வப்போது காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி சாலையை கடந்து செல்கிறது.

தற்போது கேஎன்ஆர் அருகே இரு குழுக்களாக யானைகள் பிரிந்து சாலையோர வனப்பகுதியில் உள்ளன. இந்த யானைகள் சாலைக்கு வராமல் தடுக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர் . மேலும் அருகில் உள்ள ஆதிவாசி கிராமத்திற்குள் நுழையாமல் இருக்க வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்டி வருகின்றனர். சாலைக்கு வரும் யானைகளை புகைப்படம் எடுத்து தொந்தரவு செய்யக்கூடாது என வனத்துறையினர் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.

Tags : road ,Coonoor-Mettupalayam , Coonoor-Mettupalayam, crowded and wild elephants
× RELATED நீலகிரி அதிமுக அலுவலகம், வேட்பாளர் காரில் சோதனை