×

பராமரிப்பு பணிகள் நடைபெற்று வரும் வாடிப்பட்டி பஸ்ஸ்டாண்டில் மர்ம சூட்கேசால் பரபரப்பு

வாடிப்பட்டி: வாடிப்பட்டியில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வரும் பேருந்து நிலையத்தில் பயணிகள் தங்குமிடத்தில் கேட்பாரற்று மர்ம சூட்கேஸ் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டதுவாடிப்பட்டி பேருந்து நிலையத்தில் தற்போது விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் அங்கு பயணிகள் நடமாட்டமில்லை. இந்நிலையில் அங்குள்ள பயணிகள் தங்குமிடத்தில் நேற்றுமுன்தினம் இரவு முதல் சூட்கேஸ் ஒன்று கேட்பாரற்று கிடந்தது. இது தொடர்பாக அப்பகுதியினர் வாடிப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து சம்பவ இடம் வந்த போலீசார் வெடிகுண்டு நிபுனர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

ஆனால் அவர்கள் வர காலதாமதமாகவே வாடிப்பட்டி போலீசாரே சூட்கேசை திறந்தனர்.ஆனால் அது வெறும் காலி சூட்கேசாக இருந்தது. அதனை தொடர்ந்து அதனை அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தினர். பஸ்ஸ்டாண்டில் காலி சூட்கேஸ் இருந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றமும், பரபரப்பும் நிலவியது.

Tags : bus stand ,Wadipatti , Maintenance works , Vadipatti, bus stand,Suitcase
× RELATED குப்பை கிடங்காக மாறிய கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்: பயணிகள் கடும் அவதி