×

ராஜீவ்காந்தி கொலை வழக்கு: 7 பேர் விடுதலை குறித்து ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டும்..அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டி

விழுப்புரம்: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு ஆயுள் தண்டனை கைதிகளாக சிறையில் உள்ள நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது குறித்து ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டும் என்று சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் அரசு விழா ஒன்றில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், 7 பேரையும் விடுவிப்பது குறித்து சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஆளுநருக்கு அனுப்பப்பட்டுவிட்டதை நினைவு கூர்ந்தார். மேலும் தமிழக அரசின் அதிகார வரம்புக்குட்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவிட்டதாக சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் எந்த அதிகாரம் மாநில அரசுக்கு அளிக்கப்பட்டுள்ளதோ அந்த அதிகாரத்தை முழுமையாக பயன்படுத்தி ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை  விடுதலை செய்ய வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு தீர்மானம் ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இப்போது அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பது ஆளுநர் தான் முடிவு செய்ய வேண்டும். தொடர்ந்து பேசிய அமைச்சர் சி.வி. சண்முகம், 7 பேர் விடுதலை செய்யவதில் ஆளுநர் பன்வாரிலால் நல்ல முடிவை எடுப்பார் என்று நம்பிக்கையுடன் காத்திருப்பதாக  கூறியுள்ளார். ஆளுநரின் முடிவை பொறுத்து தமிழக அரசு அடுத்தகட்ட தீர்மானத்தை முடிவெடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Rajiv Gandhi ,Governor ,release ,persons ,CVC Shanmugam , Rajiv Gandhi death, 7 released
× RELATED வெப்பத்தால் ஏற்படும்...