காஞ்சிபுரம்: இந்தியாவில் 40 சதவீத டயர்கள் தமிழகத்தில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சியட் டயர் தொழிற்சாலையை தொடக்கி வைத்த பின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். இருசக்கர வாகன டயர் முதல் போர் விமானங்களின் டயர் வரை தமிழகத்தில் தான் தயாரிக்கப்படுகிறது.