×

கொரோனா தாக்கிவிட்டதாக பயந்து தாய் சமாதி அருகிலேயே தற்கொலை செய்துகொண்ட விவசாயி: சித்தூரில் சோகம்!

சித்தூர்: கொரோனா தாக்கிவிட்டதாக பயந்து தனது தாயின் சமாதி அருகிலேயே விவசாயி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சித்தூரில் பெரும் சோகததை ஏற்படுத்தியுள்ளது. சித்தூர் மாவட்டம் காளஹஸ்தி அருகே உள்ள சேஷமா நாயுடுகண்டரிக கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணா(50). பாலகிருஷ்ணாவுக்கு மனைவி மற்றும், 2 மகன்கள் உள்ளனர். இவருக்கு இதயத்துடிப்பு அதிகரித்ததால் கடந்த சனிக்கிழமை திருப்பதியில் உள்ள ரூயா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிள்ளார். அங்கு பாலகிருஷ்ணாவுக்கு ரத்த பரிசோதனை மருத்துவர்கள், அவருக்கு வைரஸ் தொற்று இருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து, 2 நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்ற பாலகிருஷ்ணா தனது கிராமத்திற்கு சென்றார்.

இந்நிலையில் தனக்கு கொரோனா வைரஸ் தாக்கி விட்டதாகவும், தன் அருகில் யாரும் வரவேண்டாம் என்றும் குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். அதை மீறி அவர் அருகில் சென்றவர்கள் மீது கற்களை வீசி தாக்கி வீட்டுக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால், கவலையடைந்த பாலகிருஷ்ணாவின் குடும்பத்தினர், இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர்கள் இதனை கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் தமக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் என பயந்த அவர் தனது நிலத்தில் தாயாரின் சமாதி அருகில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால், பாலகிருஷ்ணாவின் குடும்பத்தினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.



Tags : Chittoor Farmer ,suicide ,grave ,Andhra Pradesh , Corona virus, farmer, suicide, chittoor
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை