×

குடிநீர், உணவு கிடைப்பதில் சிக்கல், 3 மணி நேரம் மட்டுமே தூக்கம் : உயிர் தியாகத்திற்கும் தயாராகி உள்ள மருத்துவ பணியாளர்களை கடவுளாக பாவிக்கும் சீன மக்கள்!!

பெய்ஜிங் : மருத்துவர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள் என்று பலர் வாய் வார்த்தையாக கூறுவது உண்டு. ஆனால் அந்த கூற்று உண்மை தான் என்று தற்போது கண்கூடாக நிரூபணம் ஆகி இருக்கிறது. சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக சற்றும் ஓய்வு எடுக்காமல் உழைத்து வரும் சீன மருத்துவ பணியாளர்கள் தான் அந்நாட்டு மக்களுக்கு கடவுளாக மாறி இருக்கின்றனர். சீனாவில் வூகான் நகரில் உள்ள பாம்பு இறைச்சியில் இருந்து வெடித்து கிளம்பிய இந்த உயிர்கொல்லி வைரஸ், 31 நகரங்களுக்கு பரவியது. விளைவு ஆயிரக்கணக்கான நோயாளிகள் படையெடுப்பில் சிக்கி தத்தளித்தன மருத்துவமனைகள்.

தீயைவிட தீவிரமாக பரவிய கொரோனவை கட்டுப்படுத்த மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் இரவு பகலாக உழைக்க வேண்டி இருக்கிறது. பணிபுரியும் 6 மணி நேரமும் குடிநீர் அருந்த முடியாது, உணவு கிடையாது, கழிப்பறைக்கும் போக முடியாது. இதையும் மீறி மணி ஒலித்ததும் நோயாளிகளை கவனிக்க தவறுவதில்லை. முகக்கவசம் மற்றும் 3 அடுக்கு உரையை நீண்ட நேரம் அணிவதால் தோல்தடிப்பு மற்றும் அரிப்பு ஏற்படுகிறது. இதை பொருட்படுத்தாமல் மருத்துவக் துறையில் பணி தொடருகிறது. நோய் தோற்று ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக மருத்துவ மணிக்கு என தனி செல்போன்களையும் வாங்கி இருக்கிறார்கள்.

பணி முடிந்ததும் வீட்டுக் செல்ல முடியாமல் ஓட்டல் தான் இருப்பிடம், ஓட்டலில் இருந்தபடியே குழந்தைகளுடன் வீடியோ மூலம் பேசுவது இவர்களுக்கு வாடிக்கையாகிவிட்டது. கொரோனா வைரஸ் பிடியில் சிக்கித் தவிக்கும் சீனா, நாளுக்கு நாள் அதிகரித்து வரும் உயிர்பலி என செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் நோயின் பிடியில் இருந்து மக்களை காப்பாற்ற உயிர் தியாகத்திற்கும் தயாராகி இருக்கிறது சீன மருத்துவத் துறை. எனவே கொரோனவை கட்டுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை சீனாவில் அதிகரித்து இருக்கிறது.


Tags : Chinese ,sacrifice ,gods ,God , Doctors, corona, virus, china, drinking water, food, toiletries, nurses, health workers
× RELATED அருணாச்சலப்பிரதேசத்தில் சீன எல்லையை...