×

பொள்ளாச்சி பலாத்கார வழக்கு மகிளா கோர்ட்டுக்கு மாற்றம்

கோவை:  பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளை மிரட்டி செல்போனில் ஆபாச போட்டோ, வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கடந்த ஆண்டு பொள்ளாச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.   இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. கைதான 5 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். பாதுகாப்பு காரணங்களுக்காக சேலம் சிறைக்கு மாற்றப்பட்டனர். நேற்று சேலம் சிறையில் இருந்து 5 பேரும் கோவை மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு அழைத்து வரப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி சக்திவேல், மகிளா கோர்ட்டுக்கு இந்த வழக்கை மாற்றி உத்தரவிட்டார். வரும் 25ம் தேதி விசாரணை நடக்கிறது.


Tags : Pollachi Rape Transfer ,Mahila Court Mahila Court , Pollachi Rape,Transfer ,Mahila Court
× RELATED வடசென்னை நாடாளுமன்ற தொகுதிக்கான பாஜ...