திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த 4 வருடங்களில் ெபற்றோரை கவனிக்காத பிள்ளைகள் மீது 15,650 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கேரள சட்டப்பேரவையில் சமூக நலத்துறை அமைச்சர் சைலஜா கூறியதாவது: வயதான பெற்றோரை கவனிக்காத பிள்ளைகள் மீது வழக்குப்பதிவு செய்ய சட்டத்தில் இடம் உண்டு. இதன்படி பெற்றோரை பராமரிக்காவிட்டால் பிள்ளைகளுக்கு 3 மாதம் வரை சிறையோ, 5 ஆயிரம் அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்தோ விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது. கேரளாவில் பெற்றோரை கவனிக்காத பிள்ளைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் இதுதொடர்பாக 15,650 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2016-17ல் 4767 வழக்குகள், 2017-18ல் 3356 வழக்குகள், 2018-19ல் 4300 வழக்குகள், 2019-20ல் இதுவரை 3227 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.