×

கலி முத்திப்போச்சு.... ‘4’ஐ பலாத்காரம் செய்த 6, 12: பொதுமக்கள் கடும் அதிர்ச்சி

தானே: மகாராஷ்டிராவில் பக்கத்து வீட்டில் வசிக்கும் 4 வயது சிறுமியை முறையே 6 மற்றும் 12 வயதான இரு சிறுவர்கள் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவின் தானே பகுதியில் கோட்பந்தர் சாலையில் உள்ள குடியிருப்பு பகுதியில் 4 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறாள். சிறுமியின் தந்தை கூலி வேலை செய்கிறார். தாயார் வீட்டு வேலை செய்து வருகிறார். கடந்த 4ம் தேதியன்று பெற்றோர் இருவரும் வேலைக்கு சென்றுவிட்டனர். அப்போது, பக்கத்து வீடுகளில் வசிக்கும் முறையே 6 மற்றும் 12 வயதான 2 சிறுவர்கள் அந்த சிறுமியின் வீட்டுக்குள் நுழைந்து அவளை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.  அன்று மாலை வேலை முடிந்து தாயார் வீட்டுக்கு திரும்பி வந்த போது மகளின் உடலில் காயங்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். மகளிடம் விசாரித்தபோது பக்கத்து வீடுகளில் வசிக்கும் 2 சிறுவர்கள் செய்த பாதக செயலை கூறினாள். இதுபற்றி சிறுமியின் தாய் உடனடியாக தனது கணவனுக்கு போன் செய்து தகவல் தெரிவித்து அவரை வீட்டுக்கு வரவழைத்தார்.

பக்கத்து வீடுகளில் வசிக்கும் வேறு சிலரிடம் சிறுமியின் பெற்றோர் விசாரித்தபோது, இரண்டு சிறுவர்களும் சிறுமி தனியாக இருந்தபோது அவளது வீட்டுக்குள் நுழைந்ததை பார்த்ததாக கூறினர். பாதிக்கப்பட்ட சிறுமியை அவளது பெற்றோர் உடனடியாக தானே பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர். சிறுமியின் தாய் தான் வேலை செய்யும் வீட்டு எஜமானிக்கு போன் செய்து விவரம் தெரிவித்தார்.  பின்னர் அவரது உதவியுடன் சிறுமியின் தாய் காசர்வடவ்லி போலீசில் புகார் செய்தார். ஆனால், போலீசார் உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும், பலாத்கார குற்றத்தில் ஈடுபட்ட சிறுவர்களின் பெற்றோரும் அவர்களது உறவினர்களும் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரிடம், போலீசில் அளித்த புகாரை வாபஸ் பெற வேண்டும் என்றும் இல்லாவிட்டால் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் மிரட்டியுள்ளனர்.

தகவலை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிறுமி அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையையும், காசர்வடவ்லி போலீஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கிடையே, சிறுமிக்கு நடந்த மருத்துவ பரிசோதனையில்  பாலியல் பலாத்காரம் உறுதி செய்யப்பட்டது. இதனால், 2 சிறுவர்களையும் போலீசார் நேற்று முன்தினம் பிடித்து தானேயில் உள்ள சிறார்களுக்கான நீதி வாரியத்தில் ஆஜர்படுத்தினர். சிறுவர்கள் இருவரையும் சிறார் சீர்நோக்கு பள்ளிக்கு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

Tags : Kali Muthippochu ,Kali Muthupochu , Rape, public
× RELATED பெண்ணிடம் தவறாக நடந்த பிஸியோதெரபிஸ்ட் கைது