×

விமானத்தில் கேரள தலைமை தேர்தல் அதிகாரியிடம் பணம் திருட்டு

திருவனந்தபுரம்: ஜெய்ப்பூரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு விமானத்தில் சென்ற கேரள தலைமை தேர்தல் அதிகாரி டிக்காராம் மீனா பேக்கில் இருந்து 75 ஆயிரம் பணம் திருடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. கேரள  தலைமை தேர்தல் அதிகாரியாக இருப்பவர் டிக்காராம் மீனா. இவரது சொந்த ஊர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர். நேற்று ஜெய்ப்பூரில் இருந்து இவர் ஏர் இந்தியா விமானம் மூலம் திருவனந்தபுரம் புறப்பட்டார். அவர் தனது பேக்கில் 75 ஆயிரம் வைத்து இருந்தார். திருவனந்தபுரம் வந்து பார்த்தபோது, பணத்தை காணவில்லை. இதுகுறித்து அவர் திருவனந்தபுரம் வலியதுறை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Chief Electoral Officer ,Kerala ,Theft , Air Chief, Chief Electoral Officer of Kerala, Theft of Money
× RELATED அண்ணாமலை மீதான விதிமீறல் புகார்...