×

பெண் சடலத்துடன் 2 நாள் தங்கிவிட்டு தலைமறைவான ஆசாமிக்கு வலை

அண்ணாநகர்: கோயம்பேடு அடுத்த நெற்குன்றம் மேட்டுக்குப்பம் ராஜிவ் நகரில் உள்ள ஒரு வீட்டில் கடந்த 8ம் தேதி, அழுகிய நிலையில் பெண் சடலத்தை போலீசார் மீட்டனர். விசாரணையில், அவர் பெயர் சீதா (42) என்பதும், கடந்த 5 மாதங்களாக ஆண் நண்பர் ஒருவருடன் இந்த வீட்டில் வாடகைக்கு வசித்து வந்ததும் தெரிந்தது. அந்த நபரை தேடியபோது, தலைமறைவானது தெரிந்தது. சீதாவின் உறவினர்கள் யாரும் வராததால் பிரேத பரிசோதனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும் இது கொலையா? அல்லது தற்கொலையா? என்பதை அறிய கோயம்பேடு போலீசார் நேற்று சீதாவின் உடலை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்தனர். அப்போது, சீதா உடலில் எந்த காயங்களும் இல்லை என்பது தெரியவந்தது. இவர், இறந்த பிறகு 2 நாட்கள் வரை அந்த நபர் சடலத்துடன் இருந்துள்ளார். பின்னர், துர்நாற்றம் தாங்காமல் அங்கிருந்து தப்பியது விசாரணையில் தெரியவந்தது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : stay , Female body, 2 day, staying, headstrong, assamy, web
× RELATED பாலாற்றில் ஆந்திரா அணை கட்ட தடையாணை பெறுக: வைகோ வலியுறுத்தல்