×

சுரங்கப்பாதை சர்வீஸ் சாலையில் ஆக்கிரமிப்பு கட்டிடம் அகற்றம்

ஆலந்தூர்: பரங்கிமலை ரயில்வே சுரங்கப்பாதை ஆதம்பாக்கம் வழியாக செல்கிறது. இந்த சுரங்கப்பாதையின் பக்கவாட்டில் சர்வீஸ் சாலை அமைந்துள்ளது. இவ்வழியே செல்லும் பொதுமக்கள், படிக்கட்டை பயன்படுத்தி, ரயில் தண்டவாளத்தை கடந்து சென்று வருகின்றனர். இந்நிலையில், படிக்கட்டுக்கு செல்லும் சர்வீஸ் சாலையினை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து சமையற்கூடம் அமைத்திருந்தார். இது பொதுமக்களுக்கு இடையூறாக இருந்தது. இந்நிலையில், ஆலந்தூர் மண்டல அலுவலகத்தில் நடந்த குறை தீர்க்கும் முகாமில், ஆதம்பாக்கம் நலச்சங்கத்தினர் இந்த ஆக்கிரமிப்பை அகற்றி தருமாறு ஆலந்தூர் சட்டமன்ற உறுப்பினர் தா.மோ.அன்பரசனிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அவர், அந்த மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து ஆலந்தூர் மண்டல உதவி கமிஷனர் முருகன் உத்தரவின் பேரில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ஆனந்த்ராஜ் ஆகியோர், நேற்று சம்பவ இடத்தில் ஆய்வு செய்து, ஆக்கிரமித்து கட்டப்பட்ட சமையற்கூடத்தினை பணியாளர்களைக் கொண்டு அகற்றினர்.

Tags : building ,Subway Service Road , Subway, service road, occupation, building, disposal
× RELATED தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும்...