பெரோசாபாத்: உபி.யின் திலக் நகரை சேர்ந்த இளம்பெண், 6 மாதங்களுக்கு முன் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவரை பலாத்காரம் செய்ததாக அப்பகுதியை சேர்ந்த சாமன் உபாத்யா என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை., நேற்று முன்தினம் திங்களன்று இரவு மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த கொலையில், உபாத்யாவுக்கு தொடர்பு இருக்கும் என பாதிக்கப்பட்டப் பெண்ணின் குடும்பத்தினர் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து, போலீசார் அவரை தேடி வருகின்றனர். இதனிடையே, பணியில் மெத்தனமாக இருந்ததாக மூன்று போலீசாரை மூத்த காவல் கண்காணிப்பாளர் தற்காலிக நீக்கம் செய்துள்ளார்.