×

ஆப்கன் தற்கொலை படை தாக்குதலில் 5 பேர் பலி

காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மார்ஷல் பாகிம் ராணுவப் பயிற்சிப் பள்ளியின் முன்பு நேற்று காலை 7 மணியளவில் தீவிரவாதிகள் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தினர். இதில் ராணுவத்தினர் 3, பொதுமக்கள் 2 பேர் உள்பட மொத்தம் 5 பேர் உயிரிழந்தனர். மேலும், பொதுமக்கள் 5 பேர் உள்பட 12 பேர் காயமடைந்தனர். தாக்குதலை நேரில் பார்த்த சமினுல்லா கூறுகையில், ``மிகப் பெரிய வெடி சத்தம் கேட்டது. அதன் பிறகு, துப்பாக்கிச்சூடு நடந்தது.

பின்னர் ஆம்புலன்சுகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தன,’’ என்றார். கடந்த நவம்பரில் வெடிமருந்து வேனை வெளிநாட்டினர் சென்ற வேன் மீது மோத செய்து நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 12 பேர் பலியாயினர்.

Tags : Afghan ,suicide attack ,Five , Afghan Suicide Squad, Assault
× RELATED வாக்கு என்பது நீங்கள் செலுத்தும்...