×

கன்னியாகுமரி அழகிய மண்டபம் அருகே பனங்காலவிளை பகுதியில் காட்டுத் தீ: விளைநிலத்தில் பயிரிட்டவை அனைத்தும் எரிந்து நாசம்

கன்னியாகுமரி:  கன்னியாகுமரி மாவட்டம் அழகிய மண்டபம் அருகே பனங்காலவிளை பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதன்காரணமாக, காட்டுப்பகுதியில் செடி, கொடிகள் காய்ந்த நிலையில் உள்ளதால் தற்போது தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இத்தீவிபத்தானது அழகிய மண்டபத்திற்கு பின்னால் திடீரென ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, அங்கிருந்த பொதுமக்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும், அப்பகுயில் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், தீயானது மிக வேகமாக பரவி வருகிறது.

இதனால், அருகிலுள்ள விளைநிலத்தில் பல ஏக்கரில் விளைவிக்கப்பட்ட ரப்பர், தென்னை மற்றும் வாழை உள்ளிட்டவை எரிந்து சேதமடைந்தன. தீயணைப்பு வீரர்கள் அப்பகுதிக்கு வர தாமதமானதால் அங்கு தொடர்ந்து தீயானது பரவி வருகிறது. அதன்பின், கட்டுத் தீ மிகவும் அதிகரித்துள்ளதால் தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

Tags : Panangalavilai ,hall ,Kanyakumari ,forest fire , Kanyakumari, Mandapam, Panangalavila, Wildfire
× RELATED குமரியில் வள்ளுவர் சிலை- விவேகானந்தர்...