×

நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட புதிய தேதியை பெற உச்சநீதிமன்றம் அனுமதி

டெல்லி: நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட கீழமை நீதிமன்றத்தை அணுகி புதிய தேதியை பெற்றுக்கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. குற்றவாளிகளை தனித்தனியே தூக்கிலிட அனுமதிக்க இயலாது என்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் மனு தொடர்பாக நிர்பயா குற்றவாளிகள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கீழமை நீதிமன்றத்தை மத்திய அரசு அணுக உத்தரவிட்டு வழக்கை 13ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

Tags : Supreme Court ,execution ,Nirpaya , Nirpaya
× RELATED முத்திரைத்தாள் வரி வசூலிப்பது என்பது...