சென்னை: சாலையோரத்தில் வசிப்பவர்களுக்கு தற்காலிக தங்குமிடம் ஏற்படுத்தி தர கோரிய வழக்கில் சமூக நலத்துறை செயலர் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்கறிஞர் முருகானந்தம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டிசம்பர், ஜனவரி, மாதங்களில் பனிப்பொழிவால் வீடில்லாத சாலையோர மக்கள் பெரும் துன்பத்துக்கு ஆளாகின்றனர்.