×

இந்திய ராணுவம் பதிலடி தாக்குதல் : பாகிஸ்தான் தீவிரவாதிகள் 3 பேர் உயிரிழப்பு

ஜம்மு : ஜம்மு காஷ்மீரில் எல்லைப் புறநகரமான மெந்தாரில் இந்திய ராணுவம் நடத்திய பதிலடி தாக்குதலில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் 3 பேர் உயிரிழந்தனர். ஜம்மு - காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த உடன்படிக்கையை மீறி அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. அவர்களுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள தேக்வார் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே கடந்த 8-ம் தேதி  பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி பீரங்கி தாக்குதல் நடத்தினர். பின்னர் துப்பாக்கியால் சுட்டபடி இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற அவர்களுக்கு, ராணுவத்தினர் தக்க பதிலடி கொடுத்தனர். இந்த சண்டையில் இந்திய வீரர் ஒருவர் பலியானார். மேலும் 3 பேர் காயம் அடைந்தனர்.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் எல்லைப் புறநகரமான மெந்தாரில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் மெந்தார் உள்பட எல்லைப்புற கிராமங்களில் கடந்த சில நாட்களாக இந்திய -பாகிஸ்தான் படைகள் இடையே சண்டை நீடித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.


Tags : Indian army ,attack ,militants ,Pakistani ,army ,Indian , Indian army retaliatory attack,3 Pakistani, militants killed
× RELATED உலகின் உயரமான போர்க்களம் சியாச்சின்...