×

ஆப்பிரிக்க நாடுகளைப் பதம் பார்க்கும் பாலைவன வெட்டுக்கிளிகள்: உகாண்டாவில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரி தகவல்

உகாண்டா:  பாகிஸ்தான், சோமாலியா உள்ளிட்ட நாடுகளைப் பதம் பார்த்த பாலைவன வெட்டுக் கிளிகள் தற்போது உகாண்டாவை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளன. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கடந்த வாரம் திடீரென லோகஸ்ட் வகையைச் சேர்ந்த லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் படையெடுத்து வந்து பயிர்களை நாசம் செய்தன. இதையடுத்து அங்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டது.  அதன்பின்னர், சோமாலியா, கென்யா மற்றும் எத்தியோப்பியா உள்ளிட்ட கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளிலும் தற்போது வெட்டுக்கிளிகள் கூட்டம் கூட்டமாக படையெடுத்துள்ளன. இதனை தொடர்ந்து, உகாண்டாவிலும் படையெடுத்த வெட்டுக்கிளிகள் கூட்டம் கூட்டமாக வந்து, மேய்ச்சல் நிலங்களையும், பயிர்களையும் நாசம் செய்கின்றன.

இதனால் பாதிக்கப்பட்ட நாடுகள் அவசர நிலையை அறிவித்துள்ளன. இந்நிலையில் உகாண்டாவில் முகாமிட்டுள்ள லோகஸ்ட் வகை வெட்டுக்கிளிகள் கால்நடைகள் மற்றும் பயிர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக, அந்நாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு அளித்துள்ள தகவலின்படி,  ஒரு வெட்டுக்கிளி கூட்டம் சுமார் 60 கிலோ மீட்டர் நீளமும், 40 கிலோ மீட்டர் அகலமும் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. உகாண்டாவின் முக்கிய ஏற்றுமதியான காபிச் செடிகளை வெட்டுக்கிளிகள் நாசம் செய்வதால் பொருளாதாரம் பாதிக்கப்படுவதாகவும், அவற்றை அழிக்க ட்ரோன்கள் மூலம் மருந்து தெளிக்கப்படுவதாகவும் உகாண்டா அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

Tags : countries ,African ,Uganda , African country, desert, locusts, Uganda, economy, official, information
× RELATED நைஜீரிய தீவிரவாதிகள் கடத்திய 300 பள்ளி மாணவர்கள் விடுவிப்பு