×

புடலங்காய் விலை சரிவு: விவசாயிகள் கவலை

சின்னமனூர்: சின்னமனூர் பகுதியில் புடலங்காய் விளைச்சல் அதிகரித்துள்ளதால், அதன் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். தேனி மாவட்டம், சின்னமனூர் ஒன்றியத்திலுள்ள சின்ன ஓவுலாபுரம், ஊத்துப்பட்டி, கன்னிசேர்வைபட்டி, முத்துகிருஷ்ணாபுரம், அப்பிபட்டி, எரசக்கநாயக்கனூர், வெள்ளையம்மாள்புரம் உள்ளிட்ட 15க்கு மேற்பட்ட கிராமங்களில் அதிகளவில் புடலங்காய் பயிரிடப்பட்டுள்ளது.

தற்போது இப்பகுதியில் பனிப்பொழிவு காரணமாக புடலங்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால் அதன் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Tags : Puppets, price drops, farmers
× RELATED தொடர்ந்து வெயில் வாட்டிய நிலையில் கல்வராயன்மலையில் திடீர் மூடுபனி