×

உளுந்து விலை குறைவாக நிர்ணயம்: திருக்கோவிலூர் அருகே விவசாயிகள் மறியல்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை மறியல் செய்து வருகின்றனர். உளுந்து விலை குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டதை கண்டித்து அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் முன் மறியல் செய்து வருகின்றனர். விவசாயிகளின் சாலை மறியல் போராட்டம் காரணமாக திருக்கோவிலூர் - விழுப்புரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Tags : Tirukovilur Farmers , Farmers stir
× RELATED பெரம்பலூர் அருகே அடையாளம் தெரியாத...