சென்னை: பண மோசடி வழக்கில் பிப்ரவரி 14ம் தேதி செந்தில்பாலாஜி, குற்றப்பிரிவு போலீஸ் முன் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செந்தில்பாலாஜிக்கு வழங்கப்பட்ட முன்ஜாமின் குறித்து விளக்கம் கேட்டு ஐகோர்ட்டில் காவல்துறை சார்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்கு நேரில் ஆஜராக செந்தில்பாலாஜிக்கு நோட்டீஸ் அளித்த நாளிலேயே அவருக்கு முன்ஜாமின் அளித்தது எப்படி என்று கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. முன்ஜாமின் உத்தரவில் திருத்தம் செய்ய காவல்துறை மனு செய்யலாம் என்று உயர்நீதிமன்ற நீதிபதி அனுமதி வழங்கியுள்ளார். செந்தில்பாலாஜி அமைச்சராக இருந்தபோது போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரஃபி.95 லட்சம் மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.