சென்னை: ஸ்ரீஹரிகோட்டாவை விட தமிழகத்தில் சிறந்த தொழில்நுட்பத்தில் ராக்கெட் ஏவுதளம் அமையவுள்ளது. சந்திரயான்-3 மூலம் மெதுவாக நிலவில் இறங்க வேண்டிய வழிமுறைகளை செய்ய வேண்டியுள்ளது என்று விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். நிலவில் நீர் இருப்பதை சந்திரயான்-2 மூலம் உறுதிப்படுத்த முடியும் என்று மயில்சாமி அண்ணாதுரை கூறியுள்ளார்.