×

பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்..: திருவள்ளூர் அருகே இளைஞர்கள் மீண்டும் அட்டகாசம்

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே சாலையை மறித்து பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையில் கடந்த 2018-ம் ஆண்டு பினு என்கிற பிரபல ரவுடி பட்டாக்கத்தியால் கேக் வெட்டி கொண்டாடிய போது கூட்டாளிகளுடன் கைது செய்யப்பட்டார். அப்போது தொடங்கிய பட்டாக்கத்தி கலாச்சாரம், அடுத்தடுத்து பல இடங்களில் அரங்கேறி வருகிறது. அவ்வாறு பட்டாக்கத்தியால் கேக் வெட்டி வீடியோக்களில் போஸ் கொடுப்பவர்களும் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த அஜித்குமார், நண்பர்களுடன் சேர்ந்து பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அப்போது புல்லரம்பாக்கம் கிராமத்தில் உள்ள முக்கிய சாலையின் நடுவில் கேக் வைத்து அதனை பட்டாக்கத்தியால் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆனா நிலையில் புல்லரம்பாக்கம் போலீசார் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் அஜித்குமார், கலைவாணன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்திய போலீசார், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

சில நாட்களுக்கு முன்னதாக சென்னையில் திருமண வரவேற்பில் பட்டாக்கத்தியைக் கொண்டு கேக் வெட்டி பந்தா காட்டிய புதுமாப்பிள்ளை, திருமணமாகி ஒரே நாளில் கைது செய்யப்பட்டார். மேலும் அங்கு கத்தியைக் காட்டி கத்திக்கொண்டிருந்த மற்ற மாணவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைந்தனர். இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பொதுமக்கள் கலக்கத்தில் உள்ளனர்.


Tags : Birthday celebration ,Pattadakathi , Birthday ,Celebration ,Cutting Cake,Pattadakathi:
× RELATED முதல்வர் பிறந்தநாள் விழா கால்பந்து...