திருப்பூர்: தாராபுரத்தில் உள்ள கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் அத்துமீறி ஊராட்சிமன்ற அலுவலகத்தில் டிக்-டாக் செய்த காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அண்மையில் நடைபெற்று முடித்த ஊராட்சி தேர்தலில் கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மன்ற தலைவியாக செல்வி என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஊராட்சி மன்ற தலைவி செல்வியின் கணவர் ரமேஷ்.
ஊராட்சி மன்றத்தில் அரசு அலுவலகத்தில் அத்துமீறி தலைவரின் இருக்கையில் அமர்ந்து கொண்டு டிக்-டாக் செய்து அதை வாட்சப் குழுவில் பகிர்ந்துள்ளார். இந்த டிக்-டாக் காட்சி வைரலாக பரவி வருகிறது. தனது மனைவி ஊராட்சி மன்ற தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் அவரது அலுவலக பணியில் தலையிட மாட்டேன், அதிகாரத்தை தவறுதலாக பயன்படுத்த மாட்டேன் என்று ரமேஷ் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் செல்லியின் இருக்கையில் அமர்ந்து கொண்டு ரமேஷ் டிக்-டாக் செய்து இருப்பதால் அவர் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது.