சென்னை: உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் விடுதலை குறித்த வழக்கில் அமைச்சரவை முடிவை தமிழக அரசு முன்வைக்க வேண்டும். நாளை உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில் அற்புதம்மாள் கோரிக்கை விடுத்துள்ளார். பேரறிவாளன் விடுதலையை தமிழக அரசு சாத்தியப்படுத்த வேண்டும் என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கோரியுள்ளார்.