×

மாதவரம் மண்டலத்தில் நூலகம், தபால் நிலையம் இடித்து அகற்றம்: மீண்டும் அமைக்க கோரிக்கை

புழல்: சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலம் 25வது வார்டு கதிர்வேடு, கலெக்டர் நகர், மகாலட்சுமி நகர், ராசி நகர், பரிமளம் நகர், ஐஎன்டியுசி நகர், கட்டிட தொழிலாளர் நகர், பத்மாவதி நகர், வீரராகவன் நகர், பாலாஜி நகர், ஜெய் மாருதி நகர், மூர்த்தி நகர், சீனிவாசன் நகர், ரங்கா நகர் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட நகர் பகுதிகள் உள்ளன. இங்கு சுமார் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மேற்கண்ட இந்த பகுதி மக்களுக்கு பயன்பாட்டுக்காக பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நூலகம் மற்றும் தபால் நிலையம் இடித்து அகற்றப்பட்டு சுமார் 5 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இதனால் மேற்கண்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் மூன்று கிலோ மீட்டர் தூரம் புழல் பகுதியில் உள்ள தபால் நிலையம் நூலகத்திற்கும் செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. எனவே மூடப்பட்ட நூலகம் தபால் நிலையம் மீண்டும் கதிர்வேடு பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்திலேயே அமைக்கவும் அரசுடைமை ஆக்கப்பட்ட வங்கி அமைக்கவும் சம்பந்தப்பட்ட தமிழக அரசு உயரதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கதிர்வேடு மற்றும் சுற்றியுள்ள நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Demolition ,post office ,Madhavaram Zone ,Library , Monthly, Library, Post Office, Reset, Request
× RELATED மது பாட்டில்கள் பதுக்கியவர் கைது