நாகை: நாகை அருகே பேருந்து மோதி மாணவி இறந்த நிகழ்வில் பைக்கை ஓட்டிச் சென்ற உறவினர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவி மகரஜோதியை பைக்கில் அழைத்துச் சென்ற உறவினர் வீரமணி மனவேதனையால் சவுக்குத் தோப்பில் தற்கொலை செய்து கொண்டார். நேற்று தெற்குப்பொய்கை நல்லூர் கிழக்குக் கடற்கரைச் சாலையை கடக்க முயன்றபோது பேருந்து மோதியதில் மாணவி மகரஜோதி உயிரிழந்தார்.