விருதுநகர்: இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் விருதுநகரில் நேற்று அளித்த பேட்டி: வருமான வரித்துறை சோதனை மூலம் நடிகர் விஜய்யை பணிய வைக்க பாஜ முயல்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது. அவரது படப்பிடிப்பு தளத்தில் பாஜவினர் ரகளை செய்தது கண்டனத்திற்குரியது. திரைத்துறையினருக்கு வட்டிக்கு பணம் கொடுக்கும் மதுரை அன்புச்செழியனிடம் இருப்பது தமிழகத்தின் முக்கிய பொறுப்பில் இருக்கும் ‘ப’ எழுத்தில் தொடங்கும் முக்கிய அரசியல் பிரமுகர் மற்றும் ‘உ’ எழுத்தில் தொடங்கும் பிரமுகரின் பணம் என கூறப்படுகிறது. வருமான வரித்துறையினர் உண்மையாக ரெய்டு நடத்தியிருந்தால், யார் அந்த ‘ப’ யார் அந்த ‘உ’ என்பதை கூற வேண்டாமா. இவ்வாறு அவர் தெரிவித்தார்.