கவுகாத்தி: அசாமின் போங்காய்காவன் பகுதியில் நேற்று மாலை சுமார் 6 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தின் மையம், கவுகாத்தி நகரில் இருந்து மேற்கே 86 கி.மீ. தொலைவில் இருந்தது. நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள் குலுங்கின. ஒரு சில நிமிடங்கள் தான் இந்த நிலநடுக்கம் நீடித்தது. ஆனால், மக்கள் அச்சத்தில் மக்கள் அலறியடித்து சாலைகளில் தஞ்சம் புகுந்தனர்.