×

ரயில்களில் 2ம் வகுப்பு பயணிகள் கட்டணத்தை குறைக்க வேண்டும் : வைகோ வேண்டுகோள்

சென்னை: நாடாளுமன்றத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது: புத்தாண்டின் தொடக்க நாளில், ரயில் கட்டணங்களை உயர்த்தி அரசு வெளியிட்ட அறிவிப்பு மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கின்றது. கட்டண உயர்வை அரசு திரும்பப் பெற்றுக்கொள்ளுமா என்பதை அமைச்சரிடம் இருந்து அறிய விரும்புகின்றேன்.

ரயில்வே அமைச்சர் பியுஸ் கோயல்: இந்தக் கட்டண உயர்வு என்பது, கடலில் ஒரு துளியைப்போல மிகச்சிறிய உயர்வுதான். வைகோ: மின் பயணச் சீட்டு வழங்குவதில் நடைபெறுகின்ற முறைகேடுகளால், ரயில்வே துறைக்கு மாதந்தோறும் 10 முதல் 15 கோடி இழப்பு ஏற்படுவது, அண்மையில் தெரிய வந்துள்ளது.எதிர்காலத்தில் முறைகேடுகளைத் தடுக்கின்ற வகையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுமா? பியுஸ் கோயல்: தொழில்நுட்பங்கள் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டுக்கொண்டே வருகின்றன. எனவே, அவற்றிற்கான தொழில்நுட்பத்தைத் தொடர்ந்து மேம்படுத்திக்கொண்டே வருகின்றோம்.

Tags : Vaiko , Class 2 passenger fares , reduced on trains, Vaiko request
× RELATED தமிழகம் முழுவதும் மக்களிடம் எழுச்சி...