ராமநாதபுரம் : சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் நாடே முடங்கிவிட்ட நிலையில் அந்நாட்டைச் சேர்ந்தவர் ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா வந்துள்ளது சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பெரும் அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 722 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 34,456 பேர் வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.