சென்னை: நெய்வேலியில் விஜய் படப்பிடிப்பில் பாஜக நடத்திய போராட்டம் நியாயமற்றது என பெஃப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி தெரிவித்துள்ளார். சிலரின் எதிர்பால் வெளிமாநிலங்களில் படப்பிடிப்பு நடத்துகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், தமிழ் திரைப்படத்துறையை எதிரி போல பார்க்கும் நிலை உருவாகிவிட்டது என தெரிவித்தார்.