×

அரசு,புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிப்பை கண்டறிந்து அவற்றை மீட்க தனிப்பிரிவை ஏன் துவங்க கூடாது?: தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அரசு மற்றும் புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிப்பை கண்டறிந்து அவற்றை மீட்க நடவடிக்கை எடுக்க தனிப்பிரிவை ஏன் துவங்க கூடாது?. தனி பிரிவை ஏன் துவங்க கூடாது என்பது குறித்து 3 வாரத்தில் பதிலளிக்க தமிழக  அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசு, புறம்போக்கு நிலங்களை தனி நபர் ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாக்க வேண்டும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மாவட்ட வாரியாக எத்தனை ஏக்கர் அரசு மற்றும் புறம்போக்கு நிலங்கள் உள்ளன? என நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பினார். மேலும் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க தொடரப்பட்ட வழக்குகள் எத்தனை? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.


Tags : division ,government ,land ,state ,Govt , Government, Extraordinary Lands, Occupation, Separate Division.
× RELATED காட்டு தீ அணைக்கும் பணியில் ஈடுபட்ட...