×

போலீஸ் ஒட்டிய எச்சரிக்கை போஸ்டரால் மக்கள் அதிர்ச்சி ‘வீட்டுல திருட்டு போனா நாங்க பொறுப்பு கிடையாது...’

திருவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே, நத்தம்பட்டி காவல் நிலைய கட்டுப்பாட்டில் 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராம பகுதிகளில் அடிக்கடி கொள்ளைச் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதையடுத்து நத்தம்பட்டி போலீசார் பொது இடங்களில் ‘காவல்துறை அறிவிப்பு’ என்ற பெயரில் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதில், ‘பொதுமக்கள் சொந்த வேலையாக வெளியூர் செல்லும்போது, வீடு பூட்டப்பட்டு அந்த சாவி யாரிடம் உள்ளது’ என்பதையும், ‘வீட்டிற்கு எத்தனை வாசல் உள்ளது என்பதையும் நத்தம்பட்டி காவல்நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தெரிவிக்கா விட்டால், அவர்கள் வீட்டில் நடைபெறும் அசம்பாவிதங்களுக்கு காவல்நிலையம் பொறுப்பல்ல’ என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த போஸ்டர்களை பார்க்கும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 


Tags : poster warning police , shocked, poster ,warning police,responsible ...
× RELATED பிரதமர் அடிக்கல் நாட்டியும்...